கேரளா
வித்தியாசமான இரு புதிய நீலக்குறிஞ்சி வகைகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

தன் நீலநிறப்பூக்களால் மலையினை நீலப்போர்வையால் போர்த்தி, நீலகிரி மலை எனப்பெயர் பெற வைத்த அதிசய தாவரம் நீலக்குறிஞ்சி. ஸ்ட்ரோபிலன்தஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus) என்ற அறிவியல்  பெயரால் அறியப்படும் இவ்வகை குறிஞ்சி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை மட்டுமே மலரும் தன்மையுடையதாகும், ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற இத்தாவரபேரினத்தில் சுமார் 350 வகை சிற்றினங்கள் உள்ளடங்கியுள்ளது. சென்ற வருடம் மேற்குத்தொடர்ச்சிமலைகளில் மலர்ந்து அனைவரையும் கவர்ந்த குறிஞ்சி மலர்கள், தமிழகம் மற்றும் கேரள  ஆராய்ச்சியாளர்கள் புது வகைகளை கண்டுபிடிக்க உறுதுணையானது.

கேரளாவின் கார்மல் கல்லூரி,  மாலா, புனித தோமையர் கல்லூரி, பாளை,, WWI இன்னோவேடிவ்  சொலுஷன்ஸ் (WWI Innovative Solutions) மற்றும் தமிழகத்தின் புனித ஜோசப் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இரண்டு புதிய ஸ்ட்ரோபிலன்தஸ் சிற்றினங்களை சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் கண்டுப்பிடித்துள்ளனர்.

வெப்பமண்டல ஆசியா, மடகாஸ்கர் நாடுகளில் பரவலாக காணப்படும் ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற பேரினம் சுமார் 350 வகை பூக்கும் தாவரங்களைக்கொண்டது. இரு இதழ்களுடன் தொப்பி போன்ற இதன் பூக்கள் வெண்மை, ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களில் பூத்து, காட்டின் நிலப்பரப்பிற்கு அழகு சேர்க்கின்றன. இந்த இரண்டு வகை ஸ்ட்ரோபிலன்தஸ்களும் சுமார் 8 முதல் 12 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து நீலக்குறுஞ்சியைப் போலவே கூட்டாக ஒரேநேரத்தில் பூத்து மடிபவை. மகரந்தத்தின் உருவ வேற்றுமையே இவற்றை மற்ற இனங்களினின்று வேறுபடுத்துபவை. சிக்குமகளூர் மற்றும் ஹாசன் மாவட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பூண்டு உணக்கக் கொட்டில்-களில் உள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்த்த ஆய்வாளர்கள், கண்டறியப்பட்ட மாதிரிகள் அறிவியலுக்கு புதியவகை என்று வெகுவிரைவில் அறிந்தனர். "பிளான்ட் சயின்ஸ் டுடே" என்ற அறிவியல் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, கருநாடகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து அறியப்பட்ட இந்த இரண்டு வகைத்தாவரங்களையும் அறிவியலுக்கு புதுவராவாகச்சேர்க்கிறது.

ஸ்ட்ரோபிலன்தஸ் முல்லயங்கிரியென்சிஸ் (Strobilanthes mullayangiriensis)  என்ற பெயரிடப்பட்டுள்ள முதல் சிற்றினமானது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், வெளிர் இளஞ்சிவப்பு நிறப்பூக்களுடன், சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு புது வகை குறிஞ்சி ஆகும். சிக்குமங்களுர் முல்லாயனாகிரி மலையுச்சியில் இவ்வினம் முதலில் கண்டறியப்பட்டதால் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு இப்பெயரைச் சூட்டியுள்ளனர். 

ஸ்ட்ரோபிலன்தஸ் பீசிலேயி (Strobilanthes bislei) என்றழைக்கப்படும் இரண்டாவது குறிஞ்சி சிற்றினமானது சுமார் 2.5 மீட்டர் வரை வளர்ந்து, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நீல நிற பூக்களால், மத்திய மேற்குதொடர் மலைகளை அலங்கரிக்கும் தாவரமாகும்.  கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில், பிசிலே மலைகள் (Bisle Ghat) என்ற பல்லுயிர் மையத்தில் கண்டறியப்பட்டதால்  இது இப்பெயர் பெற்றுள்ளது.

இவ்விரண்டு செடிகளும் மற்ற குறிஞ்சி இனம்போல் கூட்டமாக வளரும், முதிர்ச்சியடைய சுமார் எட்டு முதல் பதினாறு வருடங்கள் ஆகும். ஆயினும்  பூவின் வடிவும், மகரந்தத்தின் அமைப்பினால் இவை மற்ற வகையினின்று  சற்றே மாறுபட்டுள்ளதைக்கண்ட ஆராய்ச்சியாளர்கள், இவற்றினை குறிஞ்சி  இன பட்டியலில் புது வரவாய் சேர்த்துள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும்  மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களின் தாவர மற்றும் விலங்கினங்கள், பல ஆராய்ச்சியாளர்களையும், இயற்கை  ஆர்வலர்களையும் பெருவாரியாகக் கவரும் தன்மையுடன் விளங்குகிறது. இம்மலைத்தொடர்கள்  தன்னகத்தே மேலும் பல ஆச்சர்யங்களை புதைத்து வைத்திருக்கக்கூடும் என்பதில்  ஐயமில்லை.

Tamil

Recent Stories

எழுத்தாளர்
முடக்கு  வாத நோய்க்கும் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்

முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

எழுத்தாளர்
உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்பைப் பயன்படுத்தி இந்திய மொழிகளில் கல்விக்கான மொழியாக்கம்

IIT பம்பாய், IIT மெட்ராஸ் மற்றும் IIT ஐதராபாத் முதலிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆங்கிலத்திலிருந்து பல இந்திய மொழிகளுக்கு உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு அமைப்பை (SSMT) உருவாக்கியுள்ளனர்

எழுத்தாளர்
யானைகளின் வாலில் உள்ள வாழ்வியல் ரகசியங்கள்

ஆய்வாளர்கள் யானைகளின் வாலின் மயிரிழைகளில் உள்ள இயக்குநீரினைக் கொண்டு அவற்றின் மனஅழுத்த நிலையைக்  கண்டறிந்துள்ளனர்.

எழுத்தாளர்
Lockeia gigantus trace fossils found from Fort Member. Credit: Authors

ಜೈ ನಾರಾಯಣ್ ವ್ಯಾಸ್ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಸಂಶೋಧಕರು ಜೈಸಲ್ಮೇರ್ ನಗರದ ಬಳಿಯ ಜೈಸಲ್ಮೇರ್ ರಚನೆಯಲ್ಲಿ ಲಾಕಿಯಾ ಜೈಗ್ಯಾಂಟಸ್ ಪಳೆಯುಳಿಕೆಗಳನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ. ಇದು ಭಾರತದಿಂದ ಇಂತಹ ಪಳೆಯುಳಿಕೆಗಳ ಮೊದಲ ದಾಖಲೆ ಮಾತ್ರವಲ್ಲ, ಇದುವರೆಗೆ ಪತ್ತೆಯಾದ ಅತಿದೊಡ್ಡ ಲಾಕಿಯಾ ಕುರುಹುಗಳು.

எழுத்தாளர்
ಇಂಡೋ-ಬರ್ಮೀಸ್ ಪ್ಯಾಂಗೊಲಿನ್ (ಮನಿಸ್ ಇಂಡೋಬರ್ಮಾನಿಕಾ). ಕೃಪೆ: ವಾಂಗ್ಮೋ, ಎಲ್.ಕೆ., ಘೋಷ್, ಎ., ಡೋಲ್ಕರ್, ಎಸ್. ಮತ್ತು ಇತರರು.

ಕಳ್ಳತನದಿಂದ ಸಾಗಾಟವಾಗುತ್ತಿದ್ದ ಹಲವು ಪ್ರಾಣಿಗಳ ನಡುವೆ ಪ್ಯಾಂಗೋಲಿನ್ ನ ಹೊಸ ಪ್ರಭೇದವನ್ನು ಪತ್ತೆ ಮಾಡಲಾಗಿದೆ.

எழுத்தாளர்
ಸ್ಪರ್ಶರಹಿತ ಬೆರಳಚ್ಚು ಸಂವೇದಕದ ಪ್ರಾತಿನಿಧಿಕ ಚಿತ್ರ

ಸಾಧಾರಣವಾಗಿ, ಫೋನ್ ಅನ್ನು ಅನ್ಲಾಕ್ ಮಾಡುವಾಗ ಅಥವಾ ಕಛೇರಿಯಲ್ಲಿ ಬಯೋಮೆಟ್ರಿಕ್ ಸ್ಕ್ಯಾನರುಗಳನ್ನು ಬಳಸುವಾಗ, ನಿಮ್ಮ ಬೆರಳನ್ನು ಸ್ಕ್ಯಾನರಿನ ಮೇಲ್ಮೈಗೆ ಒತ್ತ ಬೇಕಾಗುತ್ತದೆ. ಬೆರಳಚ್ಚುಗಳನ್ನು ಸೆರೆಹಿಡಿಯುವುದು ಹೀಗೆ. ಆದರೆ, ಹೊಸ ಸಂಶೋಧನೆಯೊಂದು ಈ ಪ್ರಕ್ರಿಯೆಯನ್ನು ಇನ್ನಷ್ಟು ಸ್ವಚ್ಛ, ಸುಲಭ ಮತ್ತು ಹೆಚ್ಚು ನಿಖರವಾಗಿಸುವ ವಿಧಾನವನ್ನು ರೂಪಿಸಿದೆ. ಸಾಧನವನ್ನು ಮುಟ್ಟದೆಯೇ ಬೆರಳಚ್ಚನ್ನು ಸಂಗ್ರಹಿಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಹುಡುಕಿದೆ.

எழுத்தாளர்
ಮೈಕ್ರೋಸಾಫ್ಟ್ ಡಿಸೈನರ್ ನ ಇಮೇಜ್ ಕ್ರಿಯೇಟರ್ ಬಳಸಿ ಚಿತ್ರ ರಚಿಸಲಾಗಿದೆ

ಐಐಟಿ ಬಾಂಬೆಯ ಸಂಶೋಧಕರು ಶಾಕ್‌ವೇವ್-ಆಧಾರಿತ ಸೂಜಿ-ಮುಕ್ತ ಸಿರಿಂಜ್ ಅನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ. ಈ ಮೂಲಕ ಸೂಜಿಗಳಿಲ್ಲದೆ ಔಷಧಿಗಳನ್ನು ಪೂರೈಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
ಅತ್ಯಂತ ಪ್ರಾಚೀನ ವಸ್ತುವಿನ ಅಧ್ಯಯನ

ಹಯಾಬುಸಾ ಎಂದರೆ ವೇಗವಾಗಿ ಚಲಿಸುವ ಜಪಾನೀ ಬೈಕ್ ನೆನಪಿಗೆ ತಕ್ಷಣ ಬರುವುದು ಅಲ್ಲವೇ? ಆದರೆ ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ - (ಜಾಕ್ಸ, JAXA) ತನ್ನ ಒಂದು ನೌಕೆಯ ಹೆಸರು ಹಯಾಬುಸಾ 2 ಎಂದು ಇಟ್ಟಿದ್ದಾರೆ. ಈ ನೌಕೆಯನ್ನು ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ ಸೌರವ್ಯೂಹದಾದ್ಯಂತ ಸಂಚರಿಸಿ ರುಯ್ಗು (Ryugu) ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸಂಪರ್ಕ ಸಾಧಿಸುವ ಉದ್ದೇಶದಿಂದ  ಡಿಸೆಂಬರ್ 2014 ರಲ್ಲಿ ಉಡಾವಣೆ ಮಾಡಿತ್ತು. ಇದು ಸುಮಾರು ಮೂವತ್ತು ಕೋಟಿ (300 ಮಿಲಿಯನ್) ಕಿಲೋಮೀಟರ್ ದೂರ ಪ್ರಯಾಣಿಸಿ 2018 ರಲ್ಲಿ ರುಯ್ಗು ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸ್ಪರ್ಶಿಸಿತ್ತು. ಅಲ್ಲಿಯೇ ಕೆಲ ತಿಂಗಳು ಇದ್ದು ಮಾಹಿತಿ ಮತ್ತು ವಸ್ತು ಸಂಗ್ರಹಣೆ ಮಾಡಿ, 2020 ಯಲ್ಲಿ ಯಶಸ್ವಿಯಾಗಿ ಹಿಂತಿರುಗಿತ್ತು.

எழுத்தாளர்
ಕಾಂಕ್ರೀಟ್‌ ಪರೀಕ್ಷೆಗೆ ಪ್ರೋಬ್‌

ಕಾಂಕ್ರೀಟ್‌ನಲ್ಲಿ ಹುದುಗಿರುವ ರೆಬಾರ್‌ಗಳಲ್ಲಿನ ತುಕ್ಕು ಪ್ರಮಾಣವನ್ನು ಮಾಪಿಸಲು ವಿಜ್ಞಾನಿಗಳು ಒಂದು ಹೊಸ ತಪಾಸಕವನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ

ವೈರಲ್ ಸೋಂಕುಗಳು ಮತ್ತು ಸ್ವಯಂ ನಿರೋಧಕ ಕಾಯಿಲೆಗಳಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ ‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತದೆ. 

எழுத்தாளர்
ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳು

ಐಐಟಿ ಬಾಂಬೆ ಯ ಬ್ಯಾಟರಿ ಪ್ರೋಟೋಟೈಪಿಂಗ್ ಲ್ಯಾಬ್ ನ ಸಂಶೋಧಕರು ಇಂಧನ (ಶಕ್ತಿ) ಶೇಖರಣಾ ಸಾಧನವಾಗಿರುವ ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳ ಬಗ್ಗೆ ಅಧ್ಯಯನ ನಡೆಸುತ್ತಿದ್ದಾರೆ. 

Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...