Mumbai
வெண்முதுகுப் பாறூக்கழுகுகளின் வாழ்வியல் ரகசியங்கள்- ஆய்வு முடிவுகள்

வெண்முதுகுப் பாறு என்பது உலகெங்கிலும் அதிகம் காணப்பட்ட கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்டைப் பறவையாகும். இந்த பறவை தற்போது இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசிய பகுதிகளில் மட்டும் வாழ்ந்து வரும் ஒரு அருகிய நிலையில் உள்ள இனமாகும். கால்நடைகளுக்கு புகட்டப்படும் டைக்லோபினாக் (Diclofenac) எனும் மருந்தினால், அவைகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளாக குறைந்து வருகின்றது. டைக்லோபினாக் மருந்து புகட்டப்பட்ட கால்நடைகளின் உடல்களை, இந்த பறவைகள் உண்ணும்போது மூட்டு நோய் மற்றும் வாதம் போன்ற உறுப்பு செயலிழப்பு நோய்களின் தாக்கத்தால் இப்பறவைகள் இறந்துவிடுகின்றன. டைக்லோபினாக்கை கால்நடைகளுக்கு  புகட்டுவதை குறைத்தல் அல்லது தடைசெய்தல், கழுகுகளுக்கான சிறப்பு பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்க மையங்களை உருவாக்குதல், இந்த  பாறுக் கழுகுகள் தற்போது அதிகம் புழங்கும் வாழிடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தல் முதலிய முன்னெடுப்புகள் வழியாக இந்த பறவையினத்தினை பாதுகாக்கமுடியும்.

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகூர் பீடபூமி பகுதியில், பாம்பே இயற்கை அறிவியல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்தப் பறவையினங்கள் வாழத்தோதுவான பகுதிகளை கண்டறிந்துள்ளனர். இந்தப்பகுதி வெண்முதுகு பாறூக்கழுகிற்கான காப்பகம் அமைக்க சரியான பகுதி என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் ஜர்னல் ஆப் த்ரெட்டண்டு டாக்சா (Journal of Threatened Taxa) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுக் கட்டுரையில் பாறூக் கழுகுகள் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் பொதுமக்களின் கருத்தோட்டங்களும் வெளிடப்பட்டுள்ளன.

இந்திய தீபகற்ப்பத்தின் இரண்டு மலைத்தொடர்களான கிழக்குத் தொடச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இரண்டையும் இணைக்கும் சிகூர் பீடபூமியானது தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகத்தின் பண்டிபூர் புலிகள் காப்பகம் என மூன்று புலிகள் காப்பகங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 778.80 கிலோமீட்டர்களாகும். தோரயமாக இது பெங்களுர் நகரத்தின் பரப்பளவிற்கு இணையான பகுதியாகும். சிறு  எண்ணிக்கைகளில்  உள்ள  பாறூக் கழுகுகள் இங்குள்ள  காட்டுயிரிகளின் சடலங்களை புசித்து வாழ்வதனால், இவைகள் டைக்லோபினாக் மருந்தினால் பாதிக்கப்படுவதில்லை. இந்த ஆய்வில், அவைகளின் எண்ணிக்கை, இனப்பெருக்கம் மற்றும் உணவுப்பழக்கங்கள் குறித்த தரவுகளை ஆய்வாளர்கள் செப்டம்பர் 2001 முதல் மே 2012 வரையிலான காலகட்டத்தில் சேகரித்துள்ளனர்.

“2011  முதல், இந்தப் பாறூக் கழுகுகளின் எண்ணிக்கை குறித்து நாங்கள் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் கண்காணித்து வருகிறோம். இன்றளவில் வெண்முதுகுப் பாறு, செந்தலைப் பாறு மற்றும் இந்தியப் பாறு என்றழைக்கப்படும் கருங்கழுத்துப் பாறு முதலிய பறவையினங்கள் எண்ணிக்கைககள் இருநூற்றி இருபதிற்கும் மேல் அதிகரித்துள்ளன” என்கிறார் இந்த ஆய்வில் பங்குபெற்ற ஆரோக்கியநாதன் சாம்சன்.  இவர் மும்பை, பாம்பே இயற்கை ஆய்வு மையத்தின், பாறுக் கழுகுகள் ஆய்வு திட்டத்தில் உயிரியல் ஆய்வாளராக உள்ளார்.

ஆய்வாளர்கள், காலை மற்றும் மாலை வேளைகளில், பாறூக்கழுகுகள் கூடு மற்றும் உண்ணும் இடங்களில் அவைகளின் எண்ணிக்கைகள் குறித்த தரவுகளை சேகரித்தனர். எழுபது முதல் நூற்றிப்பதினைந்து பாறூக்கழுகுகள் இரண்டு தொகுப்புகளாக இங்கு வாழுகின்றன. ஆய்வாளர்கள் சிகூர் மற்றும் குண்டத்திகல்லா ஆற்றுப்பகுதியில் 68 பாறூக்கழுகுகளின் கூடுகளை கண்டறிந்துள்ளனர். இந்த 68 கூடுகள் 41 மரங்களில் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் அதிகமான கூடுகளின் எண்ணிக்கை மருத மரங்களில் (Terminalia arjuna) கட்டுப்பட்டுள்தாகவும், இந்த கூடுகள் சராசரியாக சுமார் 28 மீட்டர் உயரத்தில் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“தற்போது முதுமலை புலிகள் காப்பகம் அதிக மருத மரங்களை ஆற்றங்கரையோரம் நட்டு வருகின்றனர். இதனால் இந்த பறவையினங்கள்  கூடுகட்டுவதற்கும், இதன் எதிர்கால பாதுகாப்பிற்கும் வழிகோலும்” என்கிறார் சாம்சன். பாறுகள் இடும் முட்டைகளில், பத்தில் ஒன்பது குஞ்சுகள்  பொரித்துவிடுவதாக கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட காட்டுயிர்  சடலங்களை இந்தக் கழுகுகள் உண்ணுகின்றன. தோட்டிகளாக செயல்படும் இந்த பறவையினங்கள், சூழலில் ஊட்டச்சத்து சுழற்சியில் பெரும்பங்காற்றுகின்றன. மேலும் யானைகள் மற்றும் காட்டெருமைகளை உண்ணுவதில் இந்தப் பறவைகள் பெரிதும் விரும்புகின்றன என்றும் ஆய்வில் தெரியவருகின்றது.

இந்தப் பறவையினங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் கருத்தோட்டமும் பெரும்பங்காற்றுகின்றது. இதற்காக ஆய்வாளர்கள் கால்நடை வளர்க்கும் அல்லது கால்நடைகள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருக்கும் 109 நபர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. பத்தில் ஒன்பது பேர் பாறுக்கழுகுகளை பாதுகாப்பது சூழலியலுக்கு உகந்தது என்று கருதுகிறார்கள். கிராம மக்கள் இறந்துபோன தங்கள் கால்நடைகளை பெரும்பாலும் காடுகளில், தங்கள் வசிப்பிடங்களில் இருந்து சுமார் 300 முதல் 500 மீட்டர் தூரத்தில் விட்டுவிடுகிறார்கள். மேலும் பறவைகளுக்கு ஊறு விளைவிக்காத மேலோக்சிகேம் (meloxicam) எனும் மருந்தினையே கால்நடைகளுக்கு புகட்டுகின்றனர். மனிதர்களின் பயன்பாட்டிற்குக் கூட, இந்தப் பிராந்தியங்களில் நான்கு மருந்துக்கடைகள் மட்டுமே டைக்லோபினாக் மருந்தினை விற்கின்றனர்.

இந்த ஆய்வு முடிவுகள் மூலமாக, பாறுக்கழுகுகளுக்கு போதுமான உணவு இந்தக் காடுகள் வழங்குவதாலும் மற்றும் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இருப்பதாலும், சிகூர் பீடபூமி இவற்றின் பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக ஆய்வாளர்கள்  கருதுகின்றனர்.

Tamil

Recent Stories

எழுத்தாளர்
முடக்கு  வாத நோய்க்கும் கோவிட்-19 தொற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள்

முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

எழுத்தாளர்
உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்பைப் பயன்படுத்தி இந்திய மொழிகளில் கல்விக்கான மொழியாக்கம்

IIT பம்பாய், IIT மெட்ராஸ் மற்றும் IIT ஐதராபாத் முதலிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆங்கிலத்திலிருந்து பல இந்திய மொழிகளுக்கு உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு அமைப்பை (SSMT) உருவாக்கியுள்ளனர்

எழுத்தாளர்
யானைகளின் வாலில் உள்ள வாழ்வியல் ரகசியங்கள்

ஆய்வாளர்கள் யானைகளின் வாலின் மயிரிழைகளில் உள்ள இயக்குநீரினைக் கொண்டு அவற்றின் மனஅழுத்த நிலையைக்  கண்டறிந்துள்ளனர்.

எழுத்தாளர்
Lockeia gigantus trace fossils found from Fort Member. Credit: Authors

ಜೈ ನಾರಾಯಣ್ ವ್ಯಾಸ್ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಸಂಶೋಧಕರು ಜೈಸಲ್ಮೇರ್ ನಗರದ ಬಳಿಯ ಜೈಸಲ್ಮೇರ್ ರಚನೆಯಲ್ಲಿ ಲಾಕಿಯಾ ಜೈಗ್ಯಾಂಟಸ್ ಪಳೆಯುಳಿಕೆಗಳನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ. ಇದು ಭಾರತದಿಂದ ಇಂತಹ ಪಳೆಯುಳಿಕೆಗಳ ಮೊದಲ ದಾಖಲೆ ಮಾತ್ರವಲ್ಲ, ಇದುವರೆಗೆ ಪತ್ತೆಯಾದ ಅತಿದೊಡ್ಡ ಲಾಕಿಯಾ ಕುರುಹುಗಳು.

எழுத்தாளர்
ಇಂಡೋ-ಬರ್ಮೀಸ್ ಪ್ಯಾಂಗೊಲಿನ್ (ಮನಿಸ್ ಇಂಡೋಬರ್ಮಾನಿಕಾ). ಕೃಪೆ: ವಾಂಗ್ಮೋ, ಎಲ್.ಕೆ., ಘೋಷ್, ಎ., ಡೋಲ್ಕರ್, ಎಸ್. ಮತ್ತು ಇತರರು.

ಕಳ್ಳತನದಿಂದ ಸಾಗಾಟವಾಗುತ್ತಿದ್ದ ಹಲವು ಪ್ರಾಣಿಗಳ ನಡುವೆ ಪ್ಯಾಂಗೋಲಿನ್ ನ ಹೊಸ ಪ್ರಭೇದವನ್ನು ಪತ್ತೆ ಮಾಡಲಾಗಿದೆ.

எழுத்தாளர்
ಸ್ಪರ್ಶರಹಿತ ಬೆರಳಚ್ಚು ಸಂವೇದಕದ ಪ್ರಾತಿನಿಧಿಕ ಚಿತ್ರ

ಸಾಧಾರಣವಾಗಿ, ಫೋನ್ ಅನ್ನು ಅನ್ಲಾಕ್ ಮಾಡುವಾಗ ಅಥವಾ ಕಛೇರಿಯಲ್ಲಿ ಬಯೋಮೆಟ್ರಿಕ್ ಸ್ಕ್ಯಾನರುಗಳನ್ನು ಬಳಸುವಾಗ, ನಿಮ್ಮ ಬೆರಳನ್ನು ಸ್ಕ್ಯಾನರಿನ ಮೇಲ್ಮೈಗೆ ಒತ್ತ ಬೇಕಾಗುತ್ತದೆ. ಬೆರಳಚ್ಚುಗಳನ್ನು ಸೆರೆಹಿಡಿಯುವುದು ಹೀಗೆ. ಆದರೆ, ಹೊಸ ಸಂಶೋಧನೆಯೊಂದು ಈ ಪ್ರಕ್ರಿಯೆಯನ್ನು ಇನ್ನಷ್ಟು ಸ್ವಚ್ಛ, ಸುಲಭ ಮತ್ತು ಹೆಚ್ಚು ನಿಖರವಾಗಿಸುವ ವಿಧಾನವನ್ನು ರೂಪಿಸಿದೆ. ಸಾಧನವನ್ನು ಮುಟ್ಟದೆಯೇ ಬೆರಳಚ್ಚನ್ನು ಸಂಗ್ರಹಿಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಹುಡುಕಿದೆ.

எழுத்தாளர்
ಮೈಕ್ರೋಸಾಫ್ಟ್ ಡಿಸೈನರ್ ನ ಇಮೇಜ್ ಕ್ರಿಯೇಟರ್ ಬಳಸಿ ಚಿತ್ರ ರಚಿಸಲಾಗಿದೆ

ಐಐಟಿ ಬಾಂಬೆಯ ಸಂಶೋಧಕರು ಶಾಕ್‌ವೇವ್-ಆಧಾರಿತ ಸೂಜಿ-ಮುಕ್ತ ಸಿರಿಂಜ್ ಅನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ. ಈ ಮೂಲಕ ಸೂಜಿಗಳಿಲ್ಲದೆ ಔಷಧಿಗಳನ್ನು ಪೂರೈಸುವ ಮಾರ್ಗವನ್ನು ಕಂಡುಹಿಡಿದಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
ಅತ್ಯಂತ ಪ್ರಾಚೀನ ವಸ್ತುವಿನ ಅಧ್ಯಯನ

ಹಯಾಬುಸಾ ಎಂದರೆ ವೇಗವಾಗಿ ಚಲಿಸುವ ಜಪಾನೀ ಬೈಕ್ ನೆನಪಿಗೆ ತಕ್ಷಣ ಬರುವುದು ಅಲ್ಲವೇ? ಆದರೆ ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ - (ಜಾಕ್ಸ, JAXA) ತನ್ನ ಒಂದು ನೌಕೆಯ ಹೆಸರು ಹಯಾಬುಸಾ 2 ಎಂದು ಇಟ್ಟಿದ್ದಾರೆ. ಈ ನೌಕೆಯನ್ನು ಜಪಾನಿನ ಬಾಹ್ಯಾಕಾಶ ಸಂಸ್ಥೆ ಸೌರವ್ಯೂಹದಾದ್ಯಂತ ಸಂಚರಿಸಿ ರುಯ್ಗು (Ryugu) ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸಂಪರ್ಕ ಸಾಧಿಸುವ ಉದ್ದೇಶದಿಂದ  ಡಿಸೆಂಬರ್ 2014 ರಲ್ಲಿ ಉಡಾವಣೆ ಮಾಡಿತ್ತು. ಇದು ಸುಮಾರು ಮೂವತ್ತು ಕೋಟಿ (300 ಮಿಲಿಯನ್) ಕಿಲೋಮೀಟರ್ ದೂರ ಪ್ರಯಾಣಿಸಿ 2018 ರಲ್ಲಿ ರುಯ್ಗು ಕ್ಷುದ್ರಗ್ರಹವನ್ನು ಸ್ಪರ್ಶಿಸಿತ್ತು. ಅಲ್ಲಿಯೇ ಕೆಲ ತಿಂಗಳು ಇದ್ದು ಮಾಹಿತಿ ಮತ್ತು ವಸ್ತು ಸಂಗ್ರಹಣೆ ಮಾಡಿ, 2020 ಯಲ್ಲಿ ಯಶಸ್ವಿಯಾಗಿ ಹಿಂತಿರುಗಿತ್ತು.

எழுத்தாளர்
ಕಾಂಕ್ರೀಟ್‌ ಪರೀಕ್ಷೆಗೆ ಪ್ರೋಬ್‌

ಕಾಂಕ್ರೀಟ್‌ನಲ್ಲಿ ಹುದುಗಿರುವ ರೆಬಾರ್‌ಗಳಲ್ಲಿನ ತುಕ್ಕು ಪ್ರಮಾಣವನ್ನು ಮಾಪಿಸಲು ವಿಜ್ಞಾನಿಗಳು ಒಂದು ಹೊಸ ತಪಾಸಕವನ್ನು ಅಭಿವೃದ್ಧಿಪಡಿಸಿದ್ದಾರೆ.

எழுத்தாளர்
‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ

ವೈರಲ್ ಸೋಂಕುಗಳು ಮತ್ತು ಸ್ವಯಂ ನಿರೋಧಕ ಕಾಯಿಲೆಗಳಲ್ಲಿ ಮೈಕ್ರೋ ಆರ್‌ಎನ್‌ಎ ‘ದ್ವಿಪಾತ್ರ’ದಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತದೆ. 

எழுத்தாளர்
ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳು

ಐಐಟಿ ಬಾಂಬೆ ಯ ಬ್ಯಾಟರಿ ಪ್ರೋಟೋಟೈಪಿಂಗ್ ಲ್ಯಾಬ್ ನ ಸಂಶೋಧಕರು ಇಂಧನ (ಶಕ್ತಿ) ಶೇಖರಣಾ ಸಾಧನವಾಗಿರುವ ರೀಚಾರ್ಜ್ ಮಾಡಬಹುದಾದ ಬ್ಯಾಟರಿಗಳ ಬಗ್ಗೆ ಅಧ್ಯಯನ ನಡೆಸುತ್ತಿದ್ದಾರೆ. 

Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...
Loading content ...